31 ஆக 2017

குளியாப்பிட்டிய தண்டகமுவ சுதர்மாராம புராதன விகாரையின் தர்மசாலை புதுப்பித்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப்பின் சம்புத்த சாஸனத்திற்கு பூஜை செய்தல்: கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் செப்டெம்பர் மாதம் 2 ம் திகதி

அச்சிடுக

sudarma 2குளியாப்பிட்டிய தண்டகமுவ சுதர்மாராம புராதன விகாரையின் தர்மசாலை புதுப்பித்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப்பின் சம்புத்த சாஸனத்திற்கு பூஜை செய்தல் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் செப்டெம்பர் மாதம் 2 ம் திகதி நடைபெறும். இதில் கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களும் கலந்துகொள்வதுடன் விளக்கேற்றும் வைபவமும் நடைபெறும். மேற்படி விகாரையின் புதுப்பித்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய கலாச்சார நிதியத்தினூடாக எட்டு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பெறுமதிமிக்க இப்பழமையான விகாரையை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பது தேசிய கடமையாவதுடன் மத்திய கலாச்சார நிதியத்தினூடாக சுமார் 12000 விகாரைகள் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Twitter