பிந்திய செய்திகள்

2019 நவம்பர் 16 ஆம் திகதி நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நவம்பர் 15 இல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

2019 ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்கெடுப்பு மற்றும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகளுக்காக தேர்தல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையின் பிரகாரம் 2019-11-15 ஆம் திகதியன்று அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்துடன் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள அனைத்து பாடசாலைகளையும் மீள ஒப்படைக்கும் நிபந்தனைகளின் பிரகாரம் 2019-11-14 திகதியன்று பாடசாலை நேரத்தின் பின்னர் கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கவும் 16 ஆம் திகதியன்று வாக்களிப்பு மற்றும் வாக்குகளை எண்ணும்  நிலையங்களாக பாடசாலைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர தேர்தல் ஆணைக்குழுவுக்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

Search